செய்திகள்
தீ விபத்து

மகாராஷ்டிராவில் வணிக வளாகம் அருகே தீ விபத்து

Published On 2020-12-05 21:53 GMT   |   Update On 2020-12-05 21:53 GMT
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா நகரில் தோஸ்தி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதனருகே பல கடைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து 2 தீயணைப்பு வாகனங்கள், 2 அதிவிரைவு பொறுப்பு வாகனங்கள் மற்றும் 2 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் இல்லை.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News