செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் புதிதாக 3,419 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-12-05 17:36 GMT   |   Update On 2020-12-05 17:36 GMT
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு பற்றிய விவரம்:  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 916 பேர் குணம் அடைந்த நிலையில், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 89 ஆயிரத்து 544 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 292 ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன்  26,678 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 574 ஆக உள்ளது
Tags:    

Similar News