செய்திகள்
நிலநடுக்கம்

ஒடிசாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

Published On 2020-12-03 23:39 GMT   |   Update On 2020-12-03 23:39 GMT
ஒடிசாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பன்ஜ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 2.13 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோல், உத்தரகாண்டின் பிதோரகர் பகுதியில் அதிகாலை 3.10 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது எனபுவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News