செய்திகள்
ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறு எந்த தீர்வும் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் - ராகுல்காந்தி கருத்து

Published On 2020-12-03 22:56 GMT   |   Update On 2020-12-03 22:56 GMT
வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கு குறைவான எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர்சிங் இடையே ஆலோசனை நடைபெற்றது.

இந்த பின்னணியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 3 கருப்பு வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கு குறைவான எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது, இந்தியாவுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News