செய்திகள்
கைது

கிரிக்கெட் பந்தய தகராறில் விபரீதம் : இளைஞரை நிர்வாணமாக்கி ஊர்வலம் - 5 பேர் கைது

Published On 2020-12-02 20:04 GMT   |   Update On 2020-12-02 20:04 GMT
குஜராத்தில் அதிக மக்கள் நடமாடும் சந்தையில் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பாலியா:

குஜராத்தில் அதிக மக்கள் நடமாடும் சந்தையில் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட இந்த 5 பேரும், கிரிக்கெட் விளையாட்டில் பந்தயம் கட்டி சூதாடியதாக தெரிகிறது. இதுபற்றிய வீடியோவை இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும், அந்த இளைஞரை கடத்தி, ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி மக்கள் அதிகம் கூடியிருந்த, கம்பாலியா நகர சந்தையில் ஊர்வலம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் 2 பேர், அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்துவதுபோல காட்சிகள் இருந்தது.

இதுபற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News