செய்திகள்
புரெவி புயல்- முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி பேச்சு
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
புதுடெல்லி:
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் கரை கடக்கும் புயல் நாளை கேரள மாநிலத்தை தாக்க உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார். இதேபோல் கேரள முதல்வரிடமும் பேசியுள்ளார்.
தமிழகம், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார்.