இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93.51 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 87.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய பாதிப்புகள் -ஒரே நாளில் 41,322 பேருக்கு கொரோனா தொற்று
பதிவு: நவம்பர் 28, 2020 09:48
கொரோனா பரிசோதனை
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி புதிய பாதிப்புகள் கடந்த மாதம் வெகுவாக குறைந்த நிலையில், கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. குறிப்பாக சில வட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93.51 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 93,51,110 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 485 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,200 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,59,969 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 41,452 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,54,940 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.68 சதவீதமாகவும் உள்ளது.
Related Tags :