செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் புதிதாக 1,526 பேருக்கு கொரோனா

Published On 2020-11-28 02:19 GMT   |   Update On 2020-11-28 02:19 GMT
கர்நாடகத்தில் புதிதாக 1,526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,526 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 81 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 5 பேர், பல்லாரியில் 28 பேர், பெலகாவியில் 18 பேர், பெங்களூரு புறநகரில் 31 பேர், பெங்களூரு நகரில் 808 பேர், பீதரில் 5 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், சிக்பள்ளாப்பூரில் 16 பேர், சிக்கமகளூருவில் 27 பேர், சித்ரதுர்காவில் 37 பேர், தட்சிண கன்னடாவில் 66 பேர், தாவணகெரேயில் 26 பேர், தார்வாரில் 11 பேர், கதக்கில் 2 பேர், ஹாசனில் 31 பேர், ஹாவேரியில் 50 பேர், கலபுரகியில் 15 பேர், குடகில் 16 பேர், கோலாரில் 20 பேர், கொப்பலில் ஒருவர், மண்டியாவில் 27 பேர், மைசூருவில் 75 பேர், ராய்ச்சூரில் 22 பேர், ராமநகரில் 12 பேர், சிவமொக்காவில் 24 பேர், துமகூருவில் 63 பேர், உடுப்பியில் 29 பேர், உத்தரகன்னடாவில் 33 பேர், விஜயாப்புராவில் 12 பேர், யாதகிரியில் 4 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 6 பேர், பல்லாரி, பீதர், சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 591 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 4 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,451 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 43 ஆயிரத்து 950 பேர் குணம் அடைந்துள்ளனர். 25 ஆயிரத்து 379 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 401 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவவாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News