தாழ்வாக கிடந்த மின்கம்பி மீது உரசியதால் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் பயணிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்கம்பி மீது உரசியதால் தீப்பற்றி எரிந்த பஸ் - பயணிகள் 3 பேர் உடல் கருகி பலி
பதிவு: நவம்பர் 27, 2020 17:40
தீப்பற்றி எரியும் பஸ்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுச்சாலையில் இன்று ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் உள்ள நெடுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பஸ் உரசியது.
இதனால், பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்சின் மேற்பரப்பில் தீ பற்றியதை கவனிக்காத டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கியுள்ளார். மளமளவென பரவிய தீ பஸ் முழுவதும் எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தீ பற்றியதை கவனித்த பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து ஓடினர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த பயணிகளில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சில் பற்றியை தீயை அணைக்கு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :