செய்திகள்
எடியூரப்பா தலைமையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது
எடியூரப்பா தலைமையில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.
பெங்களூரு :
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெற உள்ளது. மந்திரி பதவியை பெற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. அதனால் மந்திரிசபை விஸ்தரிப்பு சற்று தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. எடியூரப்பா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அக்கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.