செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா

Published On 2020-11-26 02:40 GMT   |   Update On 2020-11-26 02:40 GMT
கர்நாடகத்தில் புதிதாக1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 17 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 76 ஆயிரத்து 425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,630 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 19 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 5 பேர், பல்லாரியில் 24 பேர், பெலகாவியில் 24 பேர், பெங்களூரு புறநகரில் 51 பேர், பெங்களூரு நகரில் 916 பேர், பீதரில் 3 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், சிக்பள்ளாப்பூரில் 4 பேர், சிக்கமகளூருவில் 18 பேர், சித்ரதுர்காவில் 70 பேர், தட்சிண கன்னடாவில் 39 பேர், தாவணகெரேயில் 38 பேர், தார்வாரில் 24 பேர், கதக்கில் 6 பேர், ஹாசனில் 37 பேர், ஹாவேரியில் 33 பேர், கலபுரகியில் 27 பேர், குடகில் 5 பேர், கோலாரில் 19 பேர், கொப்பலில் 4 பேர், மண்டியாவில் 38 பேர், மைசூருவில் 61 பேர், ராய்ச்சூரில் 26 பேர், ராமநகரில் 10 பேர், சிவமொக்காவில் 11 பேர், துமகூருவில் 44 பேர், உடுப்பியில் 17 பேர், உத்தரகன்னடாவில் 37 பேர், விஜயாப்புராவில் 19 பேர், யாதகிரியில் 8 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 11 பேர், பெங்களூரு புறநகர், தார்வார், துமகூருவில் தலா 2 பேர், தட்சிணகன்னடா, மைருசூவில் தலா ஒருவர் என மொத்தம் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 454 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 70 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,333 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 41 ஆயிரத்து 432 பேர் குணம் அடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 890 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 405 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவவாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News