செய்திகள்
கொரோனா பரிசோதனை

கேரளாவில் இன்று புதிதாக 5,420 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-11-24 14:02 GMT   |   Update On 2020-11-24 14:02 GMT
கேரளாவில் இன்று புதிதாக 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முதன்முதலாக கொரோனா காலடி எடுத்து வைத்தது கேரளாவில்தான். அதேபோல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியதும் கேரள மாநிலம்தான்.

ஆனால் 2-ம் கட்டமாக கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இன்று புதிதாக அம்மாநிலத்தில் 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இதுவரை 2095 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News