செய்திகள்
உ.பி. மந்திரி சித்தார்த் நாத் சிங்

சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர உ.பி. அமைச்சரவை முடிவு

Published On 2020-11-24 13:44 GMT   |   Update On 2020-11-24 13:44 GMT
உத்தர பிரதேச மாநில அமைச்சரவை சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநில அமைச்சரவை கூட்டத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கேபினட் மந்திரி சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News