செய்திகள்
பாஜக

2023-ம் ஆண்டு நடைபெறும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக வியூகம்

Published On 2020-11-23 02:13 GMT   |   Update On 2020-11-23 02:13 GMT
தெலுங்கானாவில் 2023-ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க. இப்போதிலிருந்தே வியூகம் அமைக்க தொடங்கியுள்ளது.
ஐதராபாத் :

தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் தங்களது பலத்தை நிரூபிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

அதேபோல் தெலுங்கானாவில் 2023-ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க. இப்போதிலிருந்தே வியூகம் அமைக்க தொடங்கியுள்ளது.

தெலுங்கானாவின் துபாக்கா தொகுதியில் அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இது அந்த கட்சிக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையும் அளித்துள்ளது. எனவே 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை பா.ஜ.க. இப்போதைய தொடங்கியுள்ளது. அதன்படி விரைவில் நடக்க இருக்கும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதில் பா.ஜ.க. தீவிர கவனம் செலுத்துகிறது.

Tags:    

Similar News