செய்திகள்
டிகே சிவக்குமார்

காங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

Published On 2020-11-23 02:02 GMT   |   Update On 2020-11-23 02:02 GMT
காங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார் .
பல்லாரி :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டைக்கு சென்றார். அங்கு அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அனைத்து தரப்பு மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றுவது அரசின் கடமை. ஆனால் இந்த அரசு மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. பல்லாரியை 2 ஆக பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது.

அரசு அதிகாரப்பூர்வமாக ஆணை பிறப்பித்த பிறகு அதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன். விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பியுள்ளது. காங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களின் வேலையை செய்யட்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

அதன் பிறகு அவர் பல்லாரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News