செய்திகள்
லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.
அகமதாபாத்:
குஜராத மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் பத்டி என்ற இடத்தில் இன்று லாரியும், ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு கடுமையாக சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.