செய்திகள்
டி.கே.சிவக்குமார் மகள்-எஸ்.எம்.கிருஷ்ணா பேரன் திருமண நிச்சயதார்த்தம்
டி.கே.சிவக்குமாரின் மகளுக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணமக்களை முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் வாழ்த்தினார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் வழி பேரனும், ஓராண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பிரபல தொழிலதிபரான காபி டே உரிமையாளர் சித்தார்த் மகன் அமர்த்தியா ஹெக்டேவுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா-அமர்த்தியா ஹெக்டே திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்-மந்திரி, மத்திய மந்திரி, கவர்னர் பதவிகளை வகித்த எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அக்கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர்ந்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். பா.ஜனதாவில் அவர் தற்போது மூத்த தலைவராக இருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தியை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரின் மகளுக்கும், பா.ஜனதா மூத்த தலைவரின் பேரனுக்கும் திருமணம் நடக்கிறது என்பது இரு கட்சி தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் வழி பேரனும், ஓராண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பிரபல தொழிலதிபரான காபி டே உரிமையாளர் சித்தார்த் மகன் அமர்த்தியா ஹெக்டேவுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா-அமர்த்தியா ஹெக்டே திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்-மந்திரி, மத்திய மந்திரி, கவர்னர் பதவிகளை வகித்த எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அக்கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர்ந்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். பா.ஜனதாவில் அவர் தற்போது மூத்த தலைவராக இருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தியை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரின் மகளுக்கும், பா.ஜனதா மூத்த தலைவரின் பேரனுக்கும் திருமணம் நடக்கிறது என்பது இரு கட்சி தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.