செய்திகள்
காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது மோதல் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் திட்டங்களை அரங்கேற்ற முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாதிகளில் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் ஜம்மு நகரை இணைக்கு ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுச்சாலையில் உள்ள நஹ்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச்சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுச்சாலை முடக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பஸ்சில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதனால். இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.