செய்திகள்
கோப்பு படம்

தேர்தல் தோல்வி, உட்கட்சி பூசல் - காங்கிரஸ் உயர்மட்டக்குழு இன்று அவசர ஆலோசனை

Published On 2020-11-17 04:19 GMT   |   Update On 2020-11-17 04:19 GMT
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணி அமைத்த காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 

பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி தோல்வியடைந்ததற்கு 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளில் வெற்றிபெற்றதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

அதேபோல், ராஜஸ்தான் இடைத்தேர்தலில் தோல்வி, 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற கர்நாட இடைத்தேர்தலில் ஒரு இடங்களையும் கைப்பற்றவில்லை மேலும், 8 தொகுதிகளுக்கு நடைபெற்ற குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றிபெறவில்லை. இது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக கருத்தப்படுகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். தலைமைக்கு கடிதம் எழுதியவர்களில் மூத்த தலைவரான கபில் சிபலும் ஒருவர். 

அவர் பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

பாஜக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக மக்களால் காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. கட்சி பிரச்சனைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக தலைமைக்கு எழுதிய கடித்தை அவர்களை கண்டுகொள்ளவில்லை. 

உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், எனது கருத்தை வெளிப்படுத்த வழி இல்லாதபோது அதை பொதுவெளியில் தெரிவிக்க நான் தள்ளப்படுகிறேன் என கூறினார்.

கபில் சிபல் கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதல்மந்திரியுமான அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவிட்டுள்ள கெலாட், ‘நமது கட்சியின் உள்விவகாரங்களை கபில் சிபல் ஊடகங்களில் பேச வேண்டிய அவசியமில்லை. இது நாடு முழுவதும் உள்ள நமது கட்சித்தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும்’என பதிவிட்டிருந்தார்.

அதேபோல், காங்கிரசின் சில தலைவர்கள் கபில் சிபலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உட்கட்சி பூசலுக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், பீகார் தேர்தல், இடைத்தேர்தல் தோல்விகள், மூத்த தலைவர்களின் கருத்துக்கள், உட்கட்சி பூசல் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று அவசரமாக கூடுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட உள்ள இந்த உயர்மட்டக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News