செய்திகள்
அரியானா மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று
அரியானா மாநில கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சண்டிகர்:
அரியானா மாநில கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு (81) கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.