செய்திகள்
பிரதமர் மோடி

தீபாவளியில் ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் விளக்கேற்றுவோம் - பிரதமர் மோடி

Published On 2020-11-13 15:51 GMT   |   Update On 2020-11-13 15:51 GMT
இந்திய மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பல அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள
பதிவில் கூறியதாவது:-

நமது நாட்டை அச்சமின்றி பாதுகாக்கும் நமது ராணுவ வீரகளுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் இந்த தீபாவளியன்று விளக்கேற்றுவோம். 

தைரியமிக்க நமது வீரர்கள் மீது நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்த முடியாது. எல்லையையில் உள்ள பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்

என பதிவிட்டுள்ளார்.  
Tags:    

Similar News