செய்திகள்
பட்டாசு

ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி

Published On 2020-11-11 23:51 GMT   |   Update On 2020-11-11 23:51 GMT
ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தீபாவளி தினத்தில் இரவு 2 மணி நேரத்திற்கு மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமராவதி:

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்கவும், கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடையும், குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதியும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திர அரசும் தீபாவளி பட்டாசு வெடிப்பது சம்பந்தமாக நேற்று சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், தீபாவளி தினத்தில் இரவு 8 மணி முதல் 2 மணி நேரத்திற்கு மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலத்தின் 20 நகரங்களின் காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News