செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவுக்கு முக கவசம்தான் சிறந்த மருந்து- அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்

Published On 2020-11-06 19:20 GMT   |   Update On 2020-11-06 19:20 GMT
கொரோனா தொற்று நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை முககவசம்தான் சிறந்த மருந்து என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

கொரோனா தொற்றின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி அடித்து விட்டனர். தற்போது இந்த தொற்றுநோயின் 3-வது அலையில் சிக்கி உள்ளனர். இதுவும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

பொருளாதார நிலை, பாலினம், வயது என இந்த வேறுபாடும் இந்த வைரஸ் காட்டவில்லை என்பதை உணர்ந்து உள்ளோம். நோயை கட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அது மரணத்துக்குதான் வழிவகுக்கும். எனவே முககவசம் அணிவது அவசியம். இந்த நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை முககவசம்தான் சிறந்த மருந்து.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News