செய்திகள்
கொரோனா சோதனை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

Published On 2020-11-04 01:54 GMT   |   Update On 2020-11-04 01:54 GMT
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். 2-வது நாளாக வைரஸ் தொற்று பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 29 ஆயிரத்து 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,756 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் ஒரே நாளில் 7,140 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 40 ஆயிரத்து 395 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 932 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாகல்கோட்டையில் 22 பேர், பல்லாரியில் 43 பேர், பெலகாவியில் 26 பேர், பெங்களூரு புறநகரில் 35 பேர், பெங்களூரு நகரில் 1,479 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 25 பேர், சிக்பள்ளாப்பூரில் 12 பேர், சிக்கமகளூருவில் 55 பேர், சித்ரதுர்காவில் 35 பேர், தட்சிண கன்னடாவில் 123 பேர், தாவணகெரேயில் 39 பேர், தார்வாரில் 24 பேர், கதக்கில் 5 பேர், ஹாசனில் 115 பேர், ஹாவேரியில் 9 பேர், கலபுரகியில் 22 பேர், குடகில் 9 பேர், கோலாரில் 85 பேர், கொப்பலில் 15 பேர், மண்டியாவில் 89 பேர், மைசூருவில் 125 பேர், ராய்ச்சூரில் 14 பேர், ராமநகரில் 19 பேர், சிவமொக்காவில் 94 பேர், துமகூருவில் 108 பேர், உடுப்பியில் 20 பேர், உத்தரகன்னடாவில் 46 பேர், விஜயாப்புராவில் 50 பேர், யாதகிரியில் 7 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் 13 பேர், பல்லாரி, தார்வார், ஹாசனில் தலா 2 பேர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 94 ஆயிரத்து 539 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மாநிலத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 81 லட்சத்து 85 ஆயிரத்து 676 மாதிரிகள் ஆகும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 2-வது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Tags:    

Similar News