செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
ஹன்லி:
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 6.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹன்லி பகுதியில் இருந்து வடமேற்கில் 51 கிமீ தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.