செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் இன்று மேலும் 5,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-10-31 17:50 GMT   |   Update On 2020-10-31 17:50 GMT
டெல்லியில் இன்று மேலும் 5,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 5,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,86,706 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 41 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  6,511  ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,665 பேர் குணமடைந்துள்ளனர்.   இதனால் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,476 ஆக உயர்ந்துள்ளது.  டெல்லியில் தற்போது வரை 32,719 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Tags:    

Similar News