செய்திகள்
கொரோனா சோதனை

கர்நாடகத்தில் புதிதாக 4,025 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-10-30 01:56 GMT   |   Update On 2020-10-30 01:56 GMT
கர்நாடகத்தில் புதிதாக 4,025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மேலும் 45 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 12 ஆயிரத்து 784 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 4,025 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 809 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 11 ஆயிரத்து 46 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 45 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆயிரத்து 91 ஆக அதிகரித்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 19 பேரும், பல்லாரியில் 74 பேரும், பெலகாவியில் 42 பேரும், பெங்களூரு புறநகரில் 81 பேரும், பெங்களூரு நகரில் 2,175 பேரும், பீதரில் 14 பேரும், சாம்ராஜ்நகரில் 37 பேரும், சிக்பள்ளாப்பூரில் 42 பேரும், சிக்கமகளூருவில் 38 பேரும், சித்ரதுர்காவில் 41 பேரும், தட்சிண கன்னடாவில் 96 பேரும், தாவணகெரேயில் 94 பேரும், தார்வாரில் 76 பேரும், கதக்கில் 12 பேரும், ஹாசனில் 114 பேரும், ஹாவேரியில் 54 பேரும், கலபுரகியில் 35 பேரும், குடகில் 13 பேரும், கோலாரில் 28 பேரும், கொப்பலில் 25 பேரும், மண்டியாவில் 115 பேரும், மைசூருவில் 204 பேரும், ராய்ச்சூரில் 20 பேரும், ராமநகரில் 48 பேரும், சிவமொக்காவில் 127 பேரும், துமகூருவில் 136 பேரும், உடுப்பியில் 66 பேரும், உத்தர கன்னடாவில் 99 பேரும், விஜயாப்புராவில் 71 பேரும், யாதகிரியில் 29 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று 7,661 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 219 ஆக உயர்ந்து உள்ளது. 64 ஆயிரத்து 480 பேர் சிகிச்சையில் உள்ளனர். 935 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 77 லட்சத்து ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

புதிதாக பெங்களூரு நகரில் 19 பேர், பெங்களூரு புறநகர், சித்ரதுர்கா, தார்வார், ஹாசனில் தலா 3 பேர், தட்சிண கன்னடா, மைசூரு, துமகூருவில் தலா 2 பேர், பெலகாவி, தாவணகெரே, ஹாவேரி, கலபுரகி, ராமநகர், சிவமொக்கா, உடுப்பி, விஜயாப்புரா தலா ஒருவரும் இறந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News