செய்திகள்
நவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை
நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
சமையல் கேஸ் சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் (OTP) கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யும் நபரிடம் OTP கொடுத்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
சமையல் கேஸ் சிலிண்டரை மொபைல் மூலம் பதிவு செய்யும் போது நீங்கள் பதிவு செய்திற்கும் எண்ணுக்கு OTP வந்து விடும். அதனை கேஸ் விநியோகம் செய்ய வரும் நபரிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறையினால் கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்களை அறிந்து கொள்ள முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
விநியோக அங்கீகார குறியீடு (Delivery Authentication code) என்று கூறப்படும் புதிய நடைமுறை முதலில் 100 ஸ்மார்ட் சிட்டிகளுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த புதிய நடைமுறை விரைவில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.