செய்திகள்
தற்கொலை முயற்சி

சித்தூர் அருகே காதல் ஜோடி தற்கொலை முயற்சி

Published On 2020-10-27 07:10 GMT   |   Update On 2020-10-27 07:10 GMT
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஸ்ரீகாளாஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அடுத்த சீக்கலபைலு பகுதியை சேர்ந்தவர் அமர் (வயது 22). ஆட்டோ டிரைவர். வலசப்பள்ளி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிரவந்தி (21). ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரத்தைக் கேள்விப்பட்ட இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருவீட்டாரும் தங்களை பிரித்து விடுவார்கள் எனக்கருதிய காதல் ஜோடி மனமுடைந்து கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை, அப்பகுதியினர் மீட்டு மனதப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதனப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News