செய்திகள்
ராகுல்காந்தி

விவசாயிகள் பிரச்சினைகளை பிரதமர் கேட்க வேண்டும் - ராகுல்காந்தி யோசனை

Published On 2020-10-26 22:29 GMT   |   Update On 2020-10-26 22:29 GMT
பிரதமர் மோடி உடனடியாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப் முழுவதும் உருவ பொம்மை எரிப்பு நடந்துள்ளது. பிரதமர் மீது பஞ்சாப் இப்படி கோபத்தை காட்டுவது துயரமானது. இது, ஆபத்தான முன்மாதிரி மட்டுமின்றி, நாட்டுக்கு மோசமான சம்பவம் ஆகும்.

ஆகவே, பிரதமர் உடனடியாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News