செய்திகள்
பினராயி விஜயன்

காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி கோரி முதல்வர் பழனிசாமிக்கு பினராயி விஜயன் கடிதம்

Published On 2020-10-26 15:14 GMT   |   Update On 2020-10-26 15:14 GMT
நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
திருவனந்தபுரம்:

தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி மற்றும் உருளை ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News