செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி

Published On 2020-10-25 17:02 GMT   |   Update On 2020-10-25 17:02 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்குப்பிறகு நாளை முதல் மீண்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் டோக்கன் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன்வந்துள்ளது.

திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படும்.
Tags:    

Similar News