செய்திகள்
ஆயுதங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்

இன்று ஆயுத பூஜை... போர் நினைவிடத்தில் ஆயுதங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்

Published On 2020-10-25 04:35 GMT   |   Update On 2020-10-25 04:35 GMT
ஆயுத பூஜையையொட்டி டார்ஜிலிங்கில் போர் தளவாடங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பூஜை செய்து வழிபட்டார்.
டார்ஜிலிங்:

நவராத்திரி பண்டிகையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களையும், தொழில் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். அலுவலகங்கள் அனைத்திலும் சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

அவ்வகையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பல்வேறு ராணுவ தளவாடங்களுக்கு சிறப்பு பூஜை செய்தார். 

அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும், அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதேசமயம் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட எடுக்க நமது ராணுவம் அனுமதிக்காது’ என்றார்.
Tags:    

Similar News