செய்திகள்
கைது

டெல்லியில் வங்கிகளில் ரூ.20 கோடி கடன் பெற்று மோசடி செய்த 2 தம்பதிகள் கைது

Published On 2020-10-24 22:47 GMT   |   Update On 2020-10-24 22:47 GMT
டெல்லியில் வங்கிகளில் ரூ.20 கோடி கடன் பெற்று மோசடி செய்த 4 பேரும் காசியாபாத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியை சேர்ந்த அஸ்வினி ஆரோரா மற்றும் விஜய் ஆரோரா தங்களிடம் உள்ள ஒரே சொத்தை வெவ்வேறு வங்கிகளில் பல முறை அடமானம் வைத்து ரூ.20 கோடி வரை கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகினர். இந்த மோசடியில் இருவரின் மனைவிகளும் தொடர்பு உண்டு.

இவர்கள் 4 பேரும் கடந்த 2011 முதல் 2016 ம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள பல வங்கிகளில் இப்படி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

2016-ம் ஆண்டின் இறுதியில் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் மூலமாகவே இவர்களின் மோசடி வெளியுலகிற்கு அம்பலமானது.

ஒருமுறை இவர்கள் டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் நிலம் என கூறி வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கியதும் இவர்கள் 4 பேரும் தலைமறைவாயினர்.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் 4 பேரும் டெல்லி மற்றும் காசியாபாத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News