செய்திகள்
கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 4,148 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-24 17:37 GMT   |   Update On 2020-10-24 17:37 GMT
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 4,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 4,148  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,45,574  ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 59 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் எண்ணிக்கை 3,02,340 பேர் குணமடைந்துள்ளனர்.  கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 36,807 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Tags:    

Similar News