செய்திகள்
பரிசோதனை செய்யும் ஊழியர்

மகாராஷ்டிராவில் மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-10-23 18:04 GMT   |   Update On 2020-10-23 18:04 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா தான் உள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 7,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,32,544 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 184 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,015 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 13,247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 14,45,103 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,43,922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News