செய்திகள்
இலக்கை தாக்கிய நாக் ஏவுகணை

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி

Published On 2020-10-22 06:51 GMT   |   Update On 2020-10-22 06:51 GMT
பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை போக்ரானில் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
புதுடெல்லி:

நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது. இதில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நாக் ஏவுகணையும் ஒன்று. எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று இறுதிக்கட்ட சோதனை நடைபெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான போக்ரானில் நாக் ஏவுகணை வெற்றிகரமக பரிசோதனை செய்யப்பட்டது. ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, ஏவுகணை விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும்.

இந்த ஏவுகணையானது நவீன ரக வலுவான பீரங்கிகளையும் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News