செய்திகள்
பசன்கவுடா பாட்டீல்

எடியூரப்பா நீண்ட நாட்களுக்கு பதவி வகிக்க மாட்டார்: பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

Published On 2020-10-20 15:01 GMT   |   Update On 2020-10-20 15:01 GMT
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நீண்ட நாட்களுக்கு பதவி வகிக்க மாட்டர் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரே பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் விழா ஒன்றில் பேசிய பிஜப்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யட்னால் எடியூரப்பா நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகிக்க மாட்டார் என்றார்.

மேலும், அதற்கான காலநேரம் நெருங்கி வந்துகொண்டிக்கிறது. மூத்த தலைவர்கள் எடியூரப்பா உடன் இணக்கமாக இல்லை. மோடி ஏற்கனவே, வடக்கு கர்நாடகாவிலிருந்து முதலமைச்சராக ஒருவர் பதவியேற்பார் எனத் தெரிவித்துள்ளார் என்றார்.
Tags:    

Similar News