செய்திகள்
லடாக்கில் 3.6 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
இந்தோ- சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
லடாக்:
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கில் இன்று அதிகாலை 4.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.