செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் மேலும் 3,299 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-10-18 17:16 GMT   |   Update On 2020-10-18 17:16 GMT
டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது.
 
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,017 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,716 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 23,292 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்தது.
Tags:    

Similar News