செய்திகள்
ராகுல் காந்தி

இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக கொரோனாவை கையாண்டது- ராகுல்காந்தி கருத்து

Published On 2020-10-16 22:15 GMT   |   Update On 2020-10-16 22:15 GMT
இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக கொரோனாவை கையாண்டுள்ளது என்று ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் சரிவடையும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், சீனா, இலங்கை, பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை விட, இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் கணிப்பில் கூறியுள்ளது.

இந்த பட்டியலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் இணைத்து, கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “பா.ஜனதா அரசின் மற்றொரு திடமான சாதனை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட இந்தியாவை விட சிறப்பாக கொரோனாவை கையாண்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News