செய்திகள்
கொரோனா மாதிரி

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 9.22 கோடியாக உயர்வு -ஐசிஎம்ஆர்

Published On 2020-10-16 05:28 GMT   |   Update On 2020-10-16 05:28 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.28 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  இன்று காலை நிலவரப்படி  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73.70 லட்சமாக உள்ளது. உயிரிழப்பு 1.52 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 87.56 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 9.22 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 9,22,54,927 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,28,622 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News