செய்திகள்
வைரல் புகைப்படம்

மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் - வைரல் தகவல்களின் உண்மை பின்னணி

Published On 2020-10-15 05:04 GMT   |   Update On 2020-10-15 05:04 GMT
மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் என கூறி வைரலாகும் தகவல்களின் உண்மை பின்னணியை பார்ப்போம்.


தொப்பையில் பூக்கள், நீள நிற பாவாடை அணிந்து கொண்டு ஆண் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

புகைப்படங்களில் இருப்பவரின் மனைவி மகப்பேறு கால போட்டோஷூட்டிற்கு ஒப்புக் கொள்ளவில்லை. போட்டோஷூட் எடுக்க ஏற்கனவே பணம் கொடுக்கப்பட்டதால், இவரே போட்டோஷூட் எடுத்துக் கொண்டார் என கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வைரல் படங்களை ஆய்வு செய்ததில் அவை நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் கிண்டலுக்காக நண்பருடன் இணைந்து போட்டோஷூட் எடுத்துக் கொண்டார் என தெரியவந்துள்ளது. 



அந்த வகையில் வைரல் படங்களுடன் வலம்வரும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகி விட்டது. உண்மையில் இந்த படங்கள் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை ஆகும். 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News