செய்திகள்
சிறுமி (கோப்பு படம்)

ஹத்ராஸ் மாவட்டத்தில் மீண்டும் கொடூரம்- 4 வயது குழந்தையை சீரழித்த உறவினர் கைது

Published On 2020-10-14 03:28 GMT   |   Update On 2020-10-14 03:28 GMT
ஹத்ராஸ் மாவட்டத்தில் 4 வயது குழந்தையை உறவினர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹத்ராஸ்:

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உ.பி. மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகும் பல்வேறு பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டம் சாஸ்னி பகுதியில் 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழந்தையின் உறவினரே இந்த கொடூர செயலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இத்தகவலை காவல்துறையின் அதிகாரி ருச்சி குப்தா தெரிவித்தார்.
Tags:    

Similar News