செய்திகள்
பிரதமர் மோடி

தேசிய நலன், மக்கள் நலனுக்காக போராடிய தலைவர் -ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளில் பிரதமர் மோடி டுவிட்

Published On 2020-10-11 03:55 GMT   |   Update On 2020-10-11 03:55 GMT
லோகநாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூர்ந்து தலைவர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
புதுடெல்லி:

சுதந்திர போராட்ட வீரரும், சர்வோதய இயக்க தலைவருமான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தி அவரது நினைவுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

‘லோகநாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அவதார தினத்தில் அவரை வணங்குகிறேன். அவர் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடினார். நமது ஜனநாயக நெறிமுறைகள் தாக்குதலுக்கு உள்ளானபோது, அதைப் பாதுகாக்க ஒரு வலுவான வெகுஜன இயக்கத்தை அவர் வழிநடத்தினார். அவரைப் பொருத்தவரை, தேசிய நலனுக்கும் மக்களின் நலனுக்கும் மேலாக எதுவும் இல்லை’ என மோடி கூறி உள்ளார்.

இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு மரியாதை செலுத்தி அவரை நினைவு கூர்ந்துள்ளனர். 
Tags:    

Similar News