செய்திகள்
நடிகை சஞ்சனா

சிறையில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி கேட்கும் நடிகை சஞ்சனா

Published On 2020-10-09 02:04 GMT   |   Update On 2020-10-09 02:04 GMT
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை சஞ்சனா சிறையில் வைத்தே தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட சிறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கன்னட திரையுலகில் நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி (வயது 30). இந்த நிலையில் போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சஞ்சனா கல்ராணிக்கு அக்டோபர் 10-ந் தேதி பிறந்தநாள் ஆகும். அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக நண்பர்களுடன் விருந்துடன் கொண்டாடி வந்தார். இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) சஞ்சனா கல்ராணியின் பிறந்தநாள் ஆகும்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், சிறையில் வைத்தே தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட சஞ்சனா கல்ராணி முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் சிறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கும் பட்சத்தில், சஞ்சனா தனது பிறந்தநாளை சிறையில் கேக் வெட்டி கொண்டாட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News