செய்திகள்
தேவகவுடா, சித்தராமையா

சித்தராமையாவை தரம் தாழ்த்தி பேச மாட்டேன்: தேவகவுடா

Published On 2020-10-09 01:59 GMT   |   Update On 2020-10-09 01:59 GMT
எங்கள் கட்சியை பற்றி சித்தராமையா பேசியுள்ளார். அவருக்கு இப்போது பதில் கூற மாட்டேன். இடைத்தேர்தலுக்கு பிறகு அவரை பற்றி எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்துகிறேன் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.
கலபுரகி :

முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையா குறித்து நான் தரம் தாழ்த்தி பேச மாட்டேன். எங்கள் கட்சி யாரை வளர்த்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது எனது கட்சியை காப்பாற்ற வேண்டும். அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். சிரா தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது குமாரசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டாக்டர்களின் ஆலோசனைப்படி ரெசார்ட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

கர்நாடக மேல்-சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் எங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. அதனால் எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். எங்கள் கட்சியை பற்றி சித்தராமையா பேசியுள்ளார். அவருக்கு இப்போது பதில் கூற மாட்டேன். இடைத்தேர்தலுக்கு பிறகு அவரை பற்றி எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Tags:    

Similar News