செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் : சர்வாதிகார போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் - உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி வேண்டுகோள்

Published On 2020-10-06 02:21 GMT   |   Update On 2020-10-06 02:21 GMT
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய தலைவர்கள் மீது ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்துவது வெட்கக்கேடானது. எனவே மாநில அரசு தனது சர்வாதிகார போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பகுஜன் சமாஜ் கட்சியின் குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் அதுதொடர்பான அறிக்கையை என்னிடம் அளித்தனர். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் என்னை வருத்தம் அடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய தலைவர்கள் மீது ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்துவது வெட்கக்கேடானது. எனவே மாநில அரசு தனது சர்வாதிகார போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது ஜனநாயகத்தின் வேர்களை பலவீனப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News