செய்திகள்
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு

Published On 2020-10-05 23:43 GMT   |   Update On 2020-10-05 23:43 GMT
‘ஸ்மார்ட்’ சோதனையை வெற்றிகரமாக நடத்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டுகளை செலுத்த உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒன்றை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நேற்று ஒடிசாவின் வீலர் தீவில் பரிசோதித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின் போது குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. குறிப்பாக வேகக்குறைப்பு மெக்கானிசத்தை நிலைநிறுத்துதல், டார்பிடோவை வெளிதள்ளுதல், கூம்பு பிரிதல் உள்ளிட்ட ஏவுகணையின் அனைத்து நோக்கங்களும் வெற்றிகரமாக எட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான தளவாட உருவாக்கத்தில் முக் கிய கட்டத்தை எட்டியுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. கூறியுள்ளது.

‘ஸ்மார்ட்’ சோதனையை வெற்றிகரமாக நடத்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சூப்பர்சானிக் ஏவுகணை உதவியுடன் டார்பிடோ ஏவுதலை டி.ஆர்.டி.ஏ. வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான தளவாட தயாரிப்பில் இது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகும்’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News