செய்திகள்
பிரதமர் மோடி,

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

Published On 2020-10-01 15:33 GMT   |   Update On 2020-10-01 15:33 GMT
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை அறிவித்தார். நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கம்.

இந்நிலையில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும், நீர் மேலாண்மையை பெண்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News